‘என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?’ என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட ‘ஹாட்’ டாபிக்.
“தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்களுக்குத் தொந்தரவு செய்யாது” என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தந்த பேட்டியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்தப் பரபரப்பு செய்தி குறித்து திமுக எம்.பி., காலநிதி வீராசாமியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் (மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள்) செய்த துரோகத்தையும் மீறி, ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட திமுக முடிவு செய்துள்ளது.
அதே சமயம், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க அதிமுக, பாஜகவைத் தூண்டிவிட்டு வருகிறது. இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட தயார் என்றால், எப்படி ‘திமுக – அதிமுக கூட்டணி?’ பேச்சு வந்தது என்கிற கேள்வி எழுகிறது.
அதற்கான பதிலாக, “ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி திமுகவை அதிமுக நாடியது. ஆனால், இந்தக் கோரிக்கையை, ‘மக்களின் தீர்ப்பை மீறி எதையும் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை.
அதனால், திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட தயார்’ என்று திமுக மறுத்திருக்கிறது” என்பதைக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களுடைய ஆதரவு இல்லை என்பதை நேற்று அதிமுக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.