English
புதுடெல்லி: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்துகொண்டிருந்த நிலையில் இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர். தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ஏராளானோர் ரயில் டிக்கெட்களை புக் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 10.45 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது. இதனால், ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக தட்கல் மூலம் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
Tamil
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்
புதுடெல்லி: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்துகொண்டிருந்த நிலையில் இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ஏராளானோர் ரயில் டிக்கெட்களை புக் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 10.45 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது. இதனால், ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக தட்கல் மூலம் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
Click the link above to read the full article on the original website.