அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பல அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளார்.
அந்த அடிப்படையில் புதுக்கோட்டை அ.தி.மு.க-வில் ‘பவர்ஃபுல்’ புள்ளியாக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு செக் வைத்து, வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வி.பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது புதுக்கோட்டை எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் 50 வயது பழனிவேல், வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். இவருக்கு பெரிய தொழில் சாம்ராஜ்யம் உண்டு. கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ‘வலதுகரமாக’ வலம் வந்தவர்.
கடந்த 2024 நவம்பரில் இவரது வீடுகளில் அமலாக்கத்துறை (ED) சல்லடை போட்டாலும், எடப்பாடியின் ‘குட்புக்’கில் இடம்பிடித்து இப்போது மாவட்டப் பொறுப்பைத் தட்டியெடுத்துள்ளார்.
இவரது சகோதரர் வி.முருகானந்தம் பா.ஜ.க-வில் முக்கியப் புள்ளியாக இருப்பது அரசியல் ரீதியாகக் கவனிக்கத்தக்கது. சமீபகாலமாக புதுக்கோட்டையில் அதிமுக கூட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசிக்கும் இவருக்கு, கடந்த தேர்தலில் சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 3 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் இவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. இப்போதைய கட்சி சூழலால் எடப்பாடியின் அதிரடி வியூகத்துடன் புதுக்கோட்டை வடக்கு மா.செ.பதவியுடன் என்ட்ரி கொடுத்துள்ளார் வி.பழனிவேல்.
சி.விஜயபாஸ்கரின் கோட்டையில் வேலுமணியின் ஆளாக வலம் வந்து தற்போது எடப்பாடியின் முகாமில் மா.செ.வாக மாறியிருப்பதுதான் புதுக்கோட்டை அ.தி.மு.க-வின் லேட்டஸ்ட் அதிரடி..!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.