உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – இரண்டே வாகனங்களுடன் பிரதமர் மோடி!

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மே 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம். தேச நலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளைத் தொடருவது காலத்தின் கட்டாயமாகும்.

பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்
பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் நெருக்கடி எதிரொலியால் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களைக் குறைக்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும் தமது பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாகப் பயன்படுத்தவும் யோசனை வழங்கியிருக்கிறார்.

இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

தவிர வெறும் இரண்டு கார்களுடன் தான் இன்று பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>Vijay: ‘Didn’t you understand the momentum of Kolathur’s victory?’ – Chief Minister Vijay’s response to Udhayanidhi</div>

<div>`I swear on my head; you said an alliance can be formed with DMK’ – C.V. Shanmugam’s warning | Live</div>