English
பாட்னா: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை முன்பாக, அவரது பிறந்த நாளான நாளை (அக். 31) குடியரசு தின அணிவகுப்பைப் போன்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைப்பதில் சர்தார் வல்லபாய் படேல் பெரும் பங்கு வகித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக 2014 முதல் நாடு கொண்டாடி வருகிறது. குஜராத்தில் உள்ள கெவாடியா எனும் பகுதியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டது. 2018ல் திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான இந்த சிலை,
ஒற்றுமையின் சிலை ("Statue of Unity") என்று அழைக்கப்படுகிறது.
Tamil
குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை முன் அக்.31-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு
பாட்னா: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை முன்பாக, அவரது பிறந்த நாளான நாளை (அக். 31) குடியரசு தின அணிவகுப்பைப் போன்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைப்பதில் சர்தார் வல்லபாய் படேல் பெரும் பங்கு வகித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக 2014 முதல் நாடு கொண்டாடி வருகிறது. குஜராத்தில் உள்ள கெவாடியா எனும் பகுதியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டது. 2018ல் திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான இந்த சிலை, ஒற்றுமையின் சிலை ("Statue of Unity") என்று அழைக்கப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.