சென்னை: "நதிகள் புனரமைப்பு மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புள்ள பிரச்சனை. ஆகவே மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நதிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது பருவமழைகள் முறையாக பெய்து வருகின்றன. இதன் காரணமாக பல அணைகள் நிரம்பி உபரிநீர் நதிகளில் வெளியேற்றப்படுகின்றன. வெளியேற்றப்படுகின்ற உபரிநீரை முழுமையாக விளைநிலங்களுக்கு சென்று சேமிக்க போதிய வழிகள் இன்றி பெரும்பாலான உபரிநீர் நதிகள் வழியாக கடலில் சென்று கலக்கின்றன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


