மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாணவர்களின் தாய்க்கு 15,000 ரூ உதவித்தொகை எனப் பல முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டிருந்தார்.
விஜய் தனது உரையை முடிக்கையில், “சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை” என்றார்.

தவெகவின் இந்த நிகழ்வில் துறைவாரியாக சாதித்த பல பெண்களையும் நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி விஜய் கௌரவித்திருந்தார். தவெக சார்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கும் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.