சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி காட்சி வாயிலாகவும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்.
Click the link above to read the full article on the original website.


