ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை.
இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்த தயாராக இருப்பதாக ‘The Wall Street Journal’ நாளிதழுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவலின் படி, ட்ரம்ப் அவருடைய அதிகாரிகளிடம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைக்கும் கடினமான பணியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் இப்போது அழுத்தம் கொடுத்தால், இந்தப் போர் இன்னும் 4 – 6 வாரங்களைத் தாண்டியும் நடக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார்.
ட்ரம்ப் திட்டம்
ட்ரம்பின் திட்டமே இந்தப் போரை 4 – 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது. ஒருவேளை, இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மீது கவனம் செலுத்தினால், இந்தப் போர் இன்னும் நீடிக்கலாம் என்று ட்ரம்ப் நினைக்கிறார்.
இப்போதைக்கு ட்ரம்பின் திட்டம் – ஈரானின் கடற்படை, ஏவுகணைகளை பலவீனமடைய செய்வது ஆகும். அதன் பின், தாக்குதலைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் பழையபடி, அனைத்து வர்த்தகங்களையும் தொடங்குவதாகும்.
ஒருவேளை, இது நடக்கவில்லை என்றால், ஐரோப்ப நாடுகள், வளைகுடா நாடுகள் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைப்பதாகும்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.