English
சென்னை: தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீட்டுவசதி துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘108 அவசரகால ஆம்புலன்ஸ்’ சேவையை கடந்த 2008 செப்.15-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். EMRI GHS என்ற தனியார்நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1,353 அவசரகால ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இந்த சேவை மூலம் கர்ப்பிணிகள், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என 85.98 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
Tamil
ரூ.19 கோடியில் 87 புதிய ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீட்டுவசதி துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘108 அவசரகால ஆம்புலன்ஸ்’ சேவையை கடந்த 2008 செப்.15-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். EMRI GHS என்ற தனியார்நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1,353 அவசரகால ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இந்த சேவை மூலம் கர்ப்பிணிகள், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என 85.98 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.