திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் கருவேலங்கடை, கீழ்வேளுர் வட்டம் சின்னதும்பூர், திருக்குவளை வட்டம் திருவாய்மூர், திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு குறுவை சாகுபடி பரப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டது மட்டுமின்றி, டெல்டாவுக்கு மட்டும் ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குறுவைத் தொகுப்பு வழங்கியது, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போன்றவை காரணம் ஆகும்.
Click the link above to read the full article on the original website.


