மதுரை: விரும்பும் நபர்களை கொண்டு சுமைகளை ஏற்றி, இறக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை நகரியைச் சேர்ந்த ஏஆர்ஏஎஸ் நிறுவனம், தங்கள் பணியாளர்களை கொண்டு பொருட்களை ஏற்றி, இறக்கும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடவும், பாதுகாப்பு வழங்கவும் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தது.
இதேபோல, திருச்சியைச் சேர்ந்த பழைய பேப்பர் தொழில் நடத்தி வரும் ஷேக்அர்ஷாத், பாக்கியராஜ் உள்ளிட்டோர் தொழிலாளர் சங்கத்தினருக்கு எதிராகவும், திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில், சுமை தூக்கும் தொழிலாளர் விவகாரத்தில் வியாபாரிகள் சங்கங்கள் தலையிட தடை விதிக்கக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Click the link above to read the full article on the original website.


