English
சென்னை: தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட பல காரணிகளால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், தனியார் பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
Tamil
தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னை: தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட பல காரணிகளால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், தனியார் பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
Click the link above to read the full article on the original website.