English
விழுப்புரம்: “எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. கட்சி தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது” என அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று( அக்.16) அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையொட்டி, இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் சீராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்கள், நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
Tamil
“பாமக தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என தெரியாது” – ராமதாஸ் விரக்தி
விழுப்புரம்: “எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. கட்சி தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது” என அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று( அக்.16) அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையொட்டி, இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் சீராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்கள், நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
Click the link above to read the full article on the original website.