திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கையால் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது; புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரியான பூண்டி ஏரியிலிருந்தும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 15-ம் தேதி மதியம் முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 700 கன அடி என, வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, நீர் வரத்தை பொறுத்து அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி மாலை விநாடிக்கு 10,250 கன அடி என, பூண்டி ஏரிக்கு நீர் வரத்து இருந்ததால், அன்று மாலை 6 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.