பள்ளிக்கரணை: சிறுவர் பூங்கா, நடைபாதை, மின்விளக்கு, இருக்கைகள், சிசிடிவி, கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சென்னை பள்ளிக்கரணை அணை ஏரியை சென்னை மாநகராட்சி சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள பள்ளிக்கரணை அணை ஏரி சுமார், 50 ஏக்கரில் அமைந்துள்ளது.
இந்த பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது. இந்நிலையில், முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, ஏரியின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், குப்பை கழிவுகளுடன் கழிவு நீரும் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
Click the link above to read the full article on the original website.