அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை: சிடிஆர் நிர்மல்குமார்

சென்னை: “எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை.” என அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் நிர்மல் குமார் பேசுகையில், “எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக இன்று தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக இன்று போராட்டம் நடத்தியது. இவ்வளவு அவசரமாக எஸ்ஐஆர் பணிகளை நடத்தினால், பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும். இந்த பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி கொடுமைப் படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விஜய் மக்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும்: தவெக துணை பொதுச் செயலாளர் தகவல்

எஸ்ஐஆர் விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு ஒத்திவைப்பு!