புதுடெல்லி: பிஹார் வாக்காளர்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும், ஊடுருவல்காரர்களுக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கை மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 201 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாஜக 92 இடங்களிலும், ஜேடியு 83 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
Click the link above to read the full article on the original website.