பாட்னா: பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று வரும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில், நிதிஷ் குமார் முதல்வராவது குறித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 91 தொகுதிகளிலும், ஜேடியு 83 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆர்ஜேடி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
Click the link above to read the full article on the original website.