கரூர் நெரிசல் வழக்கு: திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம்

திருச்சி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நவ.12-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் கடந்த செப்.27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. அப்போது விஜயை பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரின் மிக இளம் எம்எல்ஏ ஆகும் நாடடுப்புற பாடகி: யார் இந்த மைதிலி தாக்கூர்?

பிஹாரின் அடுத்த முதல்வர் யார்? – நிதிஷ்குமார் குறித்த பதிவை நீக்கியது ஜேடியு!