ராமேசுவரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் தேசிய மாணவர் படையின் (என்சிசி) காரைக்குடி அணி சார்பில் நேற்று நடைபெற்றது. நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் தேசிய மாணவர் படையின் காரைக்குடி அணி சார்பில் நடைபெற்றது. என்சிசி திருச்சி குழு தளபதி கர்னல் வை.விஜய்குமார் தலைமை வகித்தார்.
Click the link above to read the full article on the original website.