ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக காஷ்மீரில் 13 இடங்களில் பயங்கரவாத தடுப்பு உளவுப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக முதலில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-க்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ டைரக்டர் ஜெனரல் விஜய் சகாரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Click the link above to read the full article on the original website.