அமெரிக்காவில் டர்ஹாம் சிம்பொனியால் இசைக்கப்பட்ட சங்கப் பாடல்!

English

மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் தமிழ்த் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் சிம்பொனி இசைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரது சிம்பொனிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்து, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருவாரூர் இளைஞரான ராஜன் சோமசுந்தரம், தேர்ந்தெடுத்த ஏழு சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு சிம்பொனி இசை அமைத்து ‘சந்தம்’ என்கிற தலைப்பில் ஒரு இசைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். அத்தொகுப்பில்: 1. யாயும் ஞாயும் யாராகியரோ, 2. யாதும் ஊரே யாவரும் கேளிர், 3. வேரல் வேலி வேர்கோட்பலவின், 4. ஞாயிறு காயாத மர நிழல் பட்டு, 5.

கலம்செய் கோவே கலம்செய் கோவே, 6. முல்லை ஊர்ந்த கல்லுயர் ஏறி, 7. ஓரில் நெய்தல் கறங்க – ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பாடல்களுக்கு ராஜன் சோமசுந்தரம் சிம்பொனி இசை வடிவத்தில் நவீன இசைக் கலவையை இணைத்து கொடுத்ததுடன், அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டர்ஹாம் சிம்பொனி’ இசைக்குழுவுடன், தமிழின் முன்னணி பாடகர்கள், பல சர்வதேச இசைக்கலைஞர்கள் ஆகியோரைக் கொண்டு சர்வதேச இசைத்தொகுப்பாக உருவாக்கி வெளியிட்டிருந்தார். இத்தொகுப்பில், பாடகர்கள் சைந்தவி, கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, பிரியங்கா, பிரகதி, ராஜலக்ஷ்மி சஞ்சய் ஆகியோர் 6 சங்கத்தமிழ் பாடல்களை, அவை சுட்டும் உண்மையான உணர்ச்சிகளுடன் நவீன இசையில் அற்புதமாக பாடியிருக்கிறார்கள்.

இத்தொகுப்பு அமேசானில் சர்வதேச இசை என்னும் வகைமையின் கீழ், இந்த இசைத்தொகுப்பு டாப் 10 வரிசையை எட்டி சாதனை படைத்தது. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பாப் மார்லி, கொரியாவின் பிடிஎஸ் இசைக்குழு போன்றவர்கள் இடம்பெற்றிருக்கும் அமேசானின் டாப் 10 சர்வதேச இசைவரிசையில் சங்கத்தமிழ் இசைத்தொகுப்பான ‘சந்தம்’இடம்பெற்றிருப்பது இலக்கியத் தமிழின் தொன்மைக்கும் ஒரு தமிழ் இசைக் கலைஞர் சர்வதேச இசை வடிவத்தில் அதை சர்வதேச இசையாகப் படைத்ததும் பெருமைக்குரிய விஷயமே.


Tamil

அமெரிக்காவில் டர்ஹாம் சிம்பொனியால் இசைக்கப்பட்ட சங்கப் பாடல்!

மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் தமிழ்த் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் சிம்பொனி இசைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரது சிம்பொனிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்து, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருவாரூர் இளைஞரான ராஜன் சோமசுந்தரம், தேர்ந்தெடுத்த ஏழு சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு சிம்பொனி இசை அமைத்து ‘சந்தம்’ என்கிற தலைப்பில் ஒரு இசைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். அத்தொகுப்பில்: 1. யாயும் ஞாயும் யாராகியரோ, 2. யாதும் ஊரே யாவரும் கேளிர், 3. வேரல் வேலி வேர்கோட்பலவின், 4. ஞாயிறு காயாத மர நிழல் பட்டு, 5. கலம்செய் கோவே கலம்செய் கோவே, 6. முல்லை ஊர்ந்த கல்லுயர் ஏறி, 7. ஓரில் நெய்தல் கறங்க – ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் அடங்கியிருக்கின்றன.

இந்தப் பாடல்களுக்கு ராஜன் சோமசுந்தரம் சிம்பொனி இசை வடிவத்தில் நவீன இசைக் கலவையை இணைத்து கொடுத்ததுடன், அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டர்ஹாம் சிம்பொனி’ இசைக்குழுவுடன், தமிழின் முன்னணி பாடகர்கள், பல சர்வதேச இசைக்கலைஞர்கள் ஆகியோரைக் கொண்டு சர்வதேச இசைத்தொகுப்பாக உருவாக்கி வெளியிட்டிருந்தார். இத்தொகுப்பில், பாடகர்கள் சைந்தவி, கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, பிரியங்கா, பிரகதி, ராஜலக்ஷ்மி சஞ்சய் ஆகியோர் 6 சங்கத்தமிழ் பாடல்களை, அவை சுட்டும் உண்மையான உணர்ச்சிகளுடன் நவீன இசையில் அற்புதமாக பாடியிருக்கிறார்கள். இத்தொகுப்பு அமேசானில் சர்வதேச இசை என்னும் வகைமையின் கீழ், இந்த இசைத்தொகுப்பு டாப் 10 வரிசையை எட்டி சாதனை படைத்தது. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பாப் மார்லி, கொரியாவின் பிடிஎஸ் இசைக்குழு போன்றவர்கள் இடம்பெற்றிருக்கும் அமேசானின் டாப் 10 சர்வதேச இசைவரிசையில் சங்கத்தமிழ் இசைத்தொகுப்பான ‘சந்தம்’இடம்பெற்றிருப்பது இலக்கியத் தமிழின் தொன்மைக்கும் ஒரு தமிழ் இசைக் கலைஞர் சர்வதேச இசை வடிவத்தில் அதை சர்வதேச இசையாகப் படைத்ததும் பெருமைக்குரிய விஷயமே.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேசிய கலா உத்சவ் போட்டிக்குப் போகும் தமிழக மாணவி!

இந்தி மொழிக்கு எப்போதும் இடமில்லை! | இயக்குநர் பா.இரஞ்சித்