விடுதலை நாள் விழாவை புறக்கணித்த அமைச்சர்! – புகையும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி

English

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமி தரப்பை ஆத்திரப்படுத்தும் விதமாக தனது அரசியல் நடவடிக்கைகளை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் ஏனாம் பிராந்தியத்தில் அரசு சார்பில் கொடியேற்றி வைக்கப் பணிக்கப்பட்ட ஜான்குமார், அதை உதாசீனம் செய்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளையும் சீற வைத்திருக்கிறது. புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசில் பாஜக-வுக்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜான்குமார். அமைச்சர் பதவிக்காக பல்வேறு உத்திகளைக் கையாண்ட ஜான்குமார் அண்மையில் தான் அந்த இலக்கை அடைந்தார்.

இருந்த போதும் அவரை 110 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராகவே வலம் வர வைத்திருக்கிறார் ரங்கசாமி. முன்பு, அமைச்சர் பதவி கேட்டு போராட்டம் நடத்திய ஜான்குமார் இப்போது, தனக்கான இலாகாவை ஒதுக்கீடு செய்யக் கோரியும் சாம பேத தான தண்டங்களை எடுத்து வருகிறார். ஆனாலும், எத்தனையோ மாமலைகளைப் பார்த்துவிட்ட ரங்கசாமி, எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறார்.


Tamil

விடுதலை நாள் விழாவை புறக்கணித்த அமைச்சர்! – புகையும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமி தரப்பை ஆத்திரப்படுத்தும் விதமாக தனது அரசியல் நடவடிக்கைகளை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் ஏனாம் பிராந்தியத்தில் அரசு சார்பில் கொடியேற்றி வைக்கப் பணிக்கப்பட்ட ஜான்குமார், அதை உதாசீனம் செய்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளையும் சீற வைத்திருக்கிறது.

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசில் பாஜக-வுக்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜான்குமார். அமைச்சர் பதவிக்காக பல்வேறு உத்திகளைக் கையாண்ட ஜான்குமார் அண்மையில் தான் அந்த இலக்கை அடைந்தார். இருந்த போதும் அவரை 110 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராகவே வலம் வர வைத்திருக்கிறார் ரங்கசாமி. முன்பு, அமைச்சர் பதவி கேட்டு போராட்டம் நடத்திய ஜான்குமார் இப்போது, தனக்கான இலாகாவை ஒதுக்கீடு செய்யக் கோரியும் சாம பேத தான தண்டங்களை எடுத்து வருகிறார். ஆனாலும், எத்தனையோ மாமலைகளைப் பார்த்துவிட்ட ரங்கசாமி, எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பனையூர் பார்ட்டியில் நடப்பது என்ன? | உள்குத்து உளவாளி

“முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா சிறை செல்ல யார் காரணம்?” – தினகரனை திருப்பிக் கேட்கும் ஆர்.பி.உதயகுமார்