English
புதுடெல்லி: உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகுராஜ் பிரதாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்தில், 200 வகையான துப்பாக்கிகளுக்கு தனது மாளிகையில் பூஜை செய்தார். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம்பெற்றன. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. உ.பி. குண்டா தொகுதியை சேர்ந்த ராஜா பைய்யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக உள்ளார். இவர் துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை போட்டது தொடர்பாக அவரது மனைவி பன்வி சிங்கும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்தார். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும்,
துப்பாக்கிகளுக்கு பூஜை போட்டது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குரும் வலியுறுத்தினார்.
Tamil
உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா நடத்திய 200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்
புதுடெல்லி: உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகுராஜ் பிரதாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்தில், 200 வகையான துப்பாக்கிகளுக்கு தனது மாளிகையில் பூஜை செய்தார். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம்பெற்றன. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
உ.பி. குண்டா தொகுதியை சேர்ந்த ராஜா பைய்யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக உள்ளார். இவர் துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை போட்டது தொடர்பாக அவரது மனைவி பன்வி சிங்கும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்தார். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், துப்பாக்கிகளுக்கு பூஜை போட்டது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குரும் வலியுறுத்தினார்.
Click the link above to read the full article on the original website.