English
ஸ்ரீஹரிகோட்டா: கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில் புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அதிகஎடை கொண்ட செயற்கைக்கோள்களை பிற நாடுகளின் உதவி கொண்டு விண்னுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் இஸ்ரோ இருந்தது. அதனால் செலவீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து ராக்கெட்களின் உந்துவிசைகளை அதிகரிக்கும் பணிகளை இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்பலனாக இஸ்ரோவின் பாகுபலி எனப்படும் எல்விஎம்-3 ராக்கெட்டின் எஸ் 200 மோட்டார்கள், விகாஸ் இயந்திரம்,
கிரையோஜெனிக் இயந்திரம் ஆகியவற்றின் திறன் மேம்படுத்தப்பட்டு அதன் உந்துவிசை வேகமானது வழக்கத்தைவிட 14 விநாடிகள் வரை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் புவி வட்டப் பாதைக்கு செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
Tamil
அதிக எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
ஸ்ரீஹரிகோட்டா: கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில் புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
அதிகஎடை கொண்ட செயற்கைக்கோள்களை பிற நாடுகளின் உதவி கொண்டு விண்னுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் இஸ்ரோ இருந்தது. அதனால் செலவீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து ராக்கெட்களின் உந்துவிசைகளை அதிகரிக்கும் பணிகளை இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்பலனாக இஸ்ரோவின் பாகுபலி எனப்படும் எல்விஎம்-3 ராக்கெட்டின் எஸ் 200 மோட்டார்கள், விகாஸ் இயந்திரம், கிரையோஜெனிக் இயந்திரம் ஆகியவற்றின் திறன் மேம்படுத்தப்பட்டு அதன் உந்துவிசை வேகமானது வழக்கத்தைவிட 14 விநாடிகள் வரை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் புவி வட்டப் பாதைக்கு செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
Click the link above to read the full article on the original website.