“நள்ளிரவில் டெல்லிக்கு சென்ற போன் கால்.!” – க்ரீன் சிக்னல்; செய்து முடித்த ஆதவ், ஜான்

`ஆட்சியில் பங்கு’ என்கிற காங்கிரஸ் கட்சியின் கனவு நினைவுக்கு வருகிறது. ராகுலின் பிடிவாதம் இம்முறை வென்று, த.வெ.க-வுடன் கூட்டணி என்கிற அதிரடியான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் முயற்சி எடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, த.வெ.க-வுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கெடுக்கலாம் என கணக்கு போட்டார்.

ஆனால், தமிழக காங்கிரஸ் தலைமை தி.மு.க-வுடன் கூட்டணி என பிடிவாதமாக இருந்ததால், கட்டாய கல்யாணம் போலவே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. 

இந்நிலையில்,தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது, த.வெ.க தனிப்பெரும் கட்சியாக எழுந்து நின்றது. அந்த கட்சி சார்பில் 108 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை எட்ட த.வெ.க-வுக்கு 12 எம்.எல்.ஏக்கள் தேவையாக உள்ளது. 4-ம் தேதி அன்று  தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே, பிரவின் சக்கரவர்த்தியிடம் த.வெ.க தரப்பு தொடர்பு கொண்டது. அவரும் கூட்டணிக்கு பாசிட்டிவ் சிக்னல் கொடுத்துள்ளார். 

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
விஜய்

தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு, 4-ம் தேதி  இரவு ஆதவ் அர்ஜுனா வீட்டில் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நபர்கள் கலந்து கொண்ட  ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த நள்ளிரவிலேயே ஜான், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிக்னல் கொடுக்க, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் பேசினார்கள். நீங்கள்  ஆதரவு கொடுத்தால், ஆட்சியில் பங்கு தர விஜய் தயாராக இருப்பதாக அப்போது தெரிவித்துள்ளனர்.

மறுநாள் 5-ம் தேதி காலை, டெல்லி தலைமையிடம்  ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இருவரும் தொடர்ந்து பேசினார்கள். இதனால், அறிவலாயத்தில் நடந்த தி.மு.க கூட்டணி தலைவர்கள் சந்திப்புக்கு கூட்டத்திற்கு காங்கி்ரஸ் தரப்பிலிருந்து செல்ல வேண்டாம் என உத்தரவு டெல்லியிலிருந்து வந்தது. 

இந்த இரண்டு மூவ்களை  காங்கிரஸ் தலைமை முன்னெடுத்த பிறகு, அமைச்சரவை குறித்து அடுத்து விவாதித்தனர். இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியை தர விஜய் ஒப்புக்கொண்டார். இந்த தகவலை பிரவின் சக்கரவர்த்தி மூலம் ராகுலுக்கு சொல்லியுள்ளனர். ராகுல் காந்தி நேரடியாகவே ஜான் ஆரோக்கிய சாமி மற்றும், ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரிடமும் தொலைபேசியில் பேசினார். 

அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய கிரீஷ் சோடாங்கர் த.வெ.க-வுடன் கூட்டணி செல்லவது குறித்து பேசினார். காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும், அதற்கு ஓ.கே. சொல்ல கூட்டணிக்கு இறுதி முடிவு எட்டபட்டது. 

விஜய், ராகுல் காந்தி

இரண்டு அமைச்சர்கள் யார் என்பதை, காங்கிரஸ் தலைமையிடம் த.வெ.க கேட்டுள்ளது. த.வெ.க தரப்பிலிருந்து ராகுலிடமிருந்தே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என சொல்ல, அதற்கு ராகுலும் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐந்தாம் தேதி இரவே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், அதை ராகுலே அறிவிக்க வேண்டும் என த.வெ.க தலைமை காத்திருந்தது.

உள்ளாட்சியில் கணிசமான இடங்களை தருவதாக காங்கிரஸ் கட்சிக்கு த.வெ.க வாக்குறுதி கொடுத்துள்ளது. அதோடு வாரியம், மற்றும் வழக்கறிஞர்கள் நியமனத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு அளிக்க த.வெ.க ஒப்புக்கொண்டுள்ளது. 

நள்ளிரவில் துவங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவிலேயே முடிவுக்கு வந்தது. ஆதவ் மற்றும் ஜான் ஆகிய இருவரின் கடைசிகட்ட மூவ் காங்கிரஸ் கட்சியின் ஐம்பதாண்டு கனவுக்கு பாதை அமைத்துள்ளது என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Coimbatore: ‘Excitement then… Worry now…!’ – Vote counting day VIP candidates | Photo Album

TVK: “Congress’s strategy is wrong… They do not understand” – DMK’s TKS Elangovan