English
கரூர்: தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக கரூரில் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவீன 3-டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம்சாலையை அளவீடு செய்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ எஸ்.பி.பிரவீண்குமார், ஏஎஸ்பி முகேஷ் குமார் உள்ளிட்ட 12 பேர்கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். மேலும்,
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
Tamil
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு: 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
கரூர்: தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக கரூரில் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவீன 3-டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம்சாலையை அளவீடு செய்தனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ எஸ்.பி.பிரவீண்குமார், ஏஎஸ்பி முகேஷ் குமார் உள்ளிட்ட 12 பேர்கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
Click the link above to read the full article on the original website.