English
ஜெய்ப்பூர்: "இந்த முறை தான் முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்குத் தெரியும். அதனால்தான், நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை" என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிஹார் தேர்தலுக்கு நிதிஷ் குமார் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அசோக் கெலாட், "தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நிதிஷ் குமார் எங்கே பேசினார். தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது, வெளிநடப்பு செய்வதைப் போல அவர் உடனடியாக கிளம்பிவிட்டார்.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு நொடி கூட அவர் நிற்கவில்லை. அந்த செய்தியாளர் சந்திப்பு என்பது கிட்டத்தட்ட 26 வினாடிகள்தான் நடந்தது. மிக குறுகிய பத்திரிகையாளர் சந்திப்பு அது.
Tamil
“இந்த முறை முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்கு தெரியும்” – அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்: "இந்த முறை தான் முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்குத் தெரியும். அதனால்தான், நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை" என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிஹார் தேர்தலுக்கு நிதிஷ் குமார் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அசோக் கெலாட், "தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நிதிஷ் குமார் எங்கே பேசினார். தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது, வெளிநடப்பு செய்வதைப் போல அவர் உடனடியாக கிளம்பிவிட்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு நொடி கூட அவர் நிற்கவில்லை. அந்த செய்தியாளர் சந்திப்பு என்பது கிட்டத்தட்ட 26 வினாடிகள்தான் நடந்தது. மிக குறுகிய பத்திரிகையாளர் சந்திப்பு அது.
Click the link above to read the full article on the original website.