English
மதுரை; தமிழகம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் பள்ளிகளில் கடந்த பல ஆண்டாக 360 தலைமை ஆசிரியர்கள் உள்பட 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை கொண்டு சமாளிப்பதால், ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி தரமும், அவர்கள் எதிர்காலமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து பிரிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வியறிவு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள்,
108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,138 எண்ணிக்கையிலான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 2024-25 கல்வியாண்டின் நிலவரப்படி மொத்தம் 98,124 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
Tamil
தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி: ஆர்டிஐ தகவலும் தாக்கமும் என்ன?
மதுரை; தமிழகம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் பள்ளிகளில் கடந்த பல ஆண்டாக 360 தலைமை ஆசிரியர்கள் உள்பட 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை கொண்டு சமாளிப்பதால், ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி தரமும், அவர்கள் எதிர்காலமும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து பிரிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வியறிவு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,138 எண்ணிக்கையிலான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 2024-25 கல்வியாண்டின் நிலவரப்படி மொத்தம் 98,124 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
Click the link above to read the full article on the original website.