English
சென்னை: ‘வெடிகுண்டு வீசி தாக்குவோம்’ என நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் தனுஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீப காலமாக அரசியல் பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், திரை பிரபலங்கள் மற்றும் விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் மீது வெடிகுண்டு வீசி தாக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. பொதுவாக வீடுகள், அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத்தான் மிரட்டல் வரும். ஆனால்,
வெடிகுண்டு வீசப்படும் என்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
Tamil
நடிகர்கள் ரஜினி, கமல், தனுஷுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை
சென்னை: ‘வெடிகுண்டு வீசி தாக்குவோம்’ என நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் தனுஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீப காலமாக அரசியல் பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், திரை பிரபலங்கள் மற்றும் விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை இ-மெயில் ஒன்று வந்தது.
அதில், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் மீது வெடிகுண்டு வீசி தாக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. பொதுவாக வீடுகள், அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத்தான் மிரட்டல் வரும். ஆனால், வெடிகுண்டு வீசப்படும் என்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
Click the link above to read the full article on the original website.