ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது…
“இந்தப் போர் நான்கு – ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது…
“இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்… ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது”.
ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.