English
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கர்நாடக அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் மாலை 45,000 கனஅடியாகவும், இரவு 55,000 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று மதியம் 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படுகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கனஅடி,
16 கண் மதகுகள் வழியாக 42,500 கனஅடி என மொத்தம் 65,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்கப்படுகிறது.
Tamil
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கர்நாடக அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் மாலை 45,000 கனஅடியாகவும், இரவு 55,000 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று மதியம் 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படுகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 42,500 கனஅடி என மொத்தம் 65,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்கப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.