கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, ‘கச்சா எண்ணெய் விலை’.
இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

எப்போது போர் முடிவுக்கு வரும்?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர்,
“நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும்” என்றும், ”ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை” என்றும் பேசியிருக்கிறார்.
நீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார்.
மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.