English
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தாயை கொலை செய்த 14 வயது மகனை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். குணசேகரனுக்கு மதுப் பழக்கமும் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல, கடந்த 19-ம் தேதியும் குணசேகரன் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணசேகரன், மனைவி மகேஸ்வரியை தாக்கியுள்ளார். பின்னர் குணசேகரன் வெளியே சென்ற நிலையில், மகேஸ்வரி தனது 14 வயது மகனிடம், “உனது தந்தை என்னை அடித்தபோது ஏன் வேடிக்கை பார்த்தாய்?
நீ உனது தந்தைக்கு ஆதரவாக இருக்கிறாயா?” என்று கேட்டு, அவரை அடித்துள்ளார். பின்னர் மகேஸ்வரி வயலுக்குச் சென்றுவிட்டார்.
Tamil
உளுந்தூர்பேட்டை அருகே தாயை கொன்ற 14 வயது சிறுவன் கைது
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தாயை கொலை செய்த 14 வயது மகனை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். குணசேகரனுக்கு மதுப் பழக்கமும் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதேபோல, கடந்த 19-ம் தேதியும் குணசேகரன் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணசேகரன், மனைவி மகேஸ்வரியை தாக்கியுள்ளார். பின்னர் குணசேகரன் வெளியே சென்ற நிலையில், மகேஸ்வரி தனது 14 வயது மகனிடம், “உனது தந்தை என்னை அடித்தபோது ஏன் வேடிக்கை பார்த்தாய்? நீ உனது தந்தைக்கு ஆதரவாக இருக்கிறாயா?” என்று கேட்டு, அவரை அடித்துள்ளார். பின்னர் மகேஸ்வரி வயலுக்குச் சென்றுவிட்டார்.
Click the link above to read the full article on the original website.