காங்கிரஸ்: “கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது” – செல்வப்பெருந்தகை

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் உள்ளிட்ட 41க்கும் மேற்பட்டோரிடம் கூட்டாகவும் தனித்தனியாகவும் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர்.

அதில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு, உட்கட்சி மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

செல்வப்பெருந்தகை - ஸ்டாலின்
செல்வப்பெருந்தகை – ஸ்டாலின்

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், “தேர்தல் உத்தி தொடர்பாக கட்சியின் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும்” என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில், “எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எதிர்க்

கட்சி தலைவரும் எல்லோரையும் அழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், காரிய கமிட்டி உறுப்பினர்கள், மேனாள் மாநில தலைவர்கள், மேனாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை - ஸ்டாலின்
செல்வப்பெருந்தகை – ஸ்டாலின்

பொதுவெளியில் கூட்டணியை பற்றி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ட்வீட் போடுவது, அறிக்கை கொடுப்பது எனக் கூட்டணிக் குறித்து யாரும் பேசக்கூடாது என மிகவும் வேதனையோடு தெரிவித்தார்கள். எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Why don’t women who raise bulls participate in Jallikattu like men?

Trade War: Greenland; Taxes for Friendly Countries Against America; President Trump!