English
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை – அக்.29) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக அரசின் பல்வேறு துறைகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. மாநகராட்சி, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை என துறைசார் ஆலோசனைக் கூட்டங்கள் களைகட்டின. 2015 சென்னை பெருவெள்ளம் கற்றுத்தந்த பாடம்தான் என மக்களே பேசிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டங்கள் அமைந்தன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் பலரும் தெரிவித்தனர்.
Tamil
வெளுத்துவாங்கும் வடகிழக்கு பருவமழை: உங்கள் பகுதி நிலவரம் என்ன?
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை – அக்.29) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக அரசின் பல்வேறு துறைகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. மாநகராட்சி, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை என துறைசார் ஆலோசனைக் கூட்டங்கள் களைகட்டின. 2015 சென்னை பெருவெள்ளம் கற்றுத்தந்த பாடம்தான் என மக்களே பேசிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டங்கள் அமைந்தன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் பலரும் தெரிவித்தனர்.
Click the link above to read the full article on the original website.