ஓசூர்: புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஓசூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. வாஜ்பாய் காலம் முதல் புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்கிறது. வரும் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. கட்சி சார்பில் நிர்வாகிகள் போட்டியிடுவார்கள்.
தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிபுரிந்து வருகின்றன. தமிழகத்தில் மும்முனை போட்டி இருந்தாலும் அதிமுக எளிதாக ஆட்சி அமைத்துவிடும். தவெகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 25,000 – 50,000 வாக்குகள் உள்ளன. வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Click the link above to read the full article on the original website.