English
சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை, போலீஸார் பறிமுதல் செய்தனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சென்னையை அடுத்த சோழவரம், காரனோடை டோல் பிளாசா அருகே சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அசோக் லேலண்ட் வகை பெரிய வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். ஆனால், வாகனத்தில் எந்த பொருட்களும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீஸார் மீண்டும் சோதித்தபோது, வாகனத்தின் இடையே பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
Tamil
லாரியில் ரகசியமாக பதுக்கிவைத்து ரூ.2 கோடி கஞ்சா கடத்திய இருவர் கைது
சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை, போலீஸார் பறிமுதல் செய்தனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சென்னையை அடுத்த சோழவரம், காரனோடை டோல் பிளாசா அருகே சாதாரண உடையில் கண்காணித்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த அசோக் லேலண்ட் வகை பெரிய வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். ஆனால், வாகனத்தில் எந்த பொருட்களும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீஸார் மீண்டும் சோதித்தபோது, வாகனத்தின் இடையே பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.