ரிமோட்டை டிவி மீது வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியை அடுத்த புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகனின் முயற்சியால் நம்மவர் நூலகம், படிப்பகம், கலைக்கூடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் பேசியதாவது: அன்பு கட்சியை தாண்டியது. அண்ணாவின் மேல் எனக்கு இருக்கும் அன்பும் அப்படிப்பட்டதுதான். அவர்களிடம் கற்ற பிள்ளைகள் அனைவருக்கும், அவர்களிடம் கற்றவர்களுக்கும், இதே குணாதிசயம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பதவி வரும்போது, பணிவும், துணிவும் வர வேண்டும். பணிவுக்காக, துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம்.
Click the link above to read the full article on the original website.