கோவை: மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இம்மாநாடு தொடர்பாக வரவேற்பு குழுவின் கூட்டம் கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று (நவ.14) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.
Click the link above to read the full article on the original website.