English
புதுச்சேரி: விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரியில் 11.84 செமீ மழை அளவு பதிவானது. மழை நின்றும் நகரின் முக்கியமான இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்தனர். புதுவையில் கடந்த 16-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. பகல் பொழுதில் மட்டும் 2.86 செமீ மழை பதிவானது. மதியத்துக்கு பின் மழை பெய்யவில்லை. ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரெங்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல நின்றது.
Tamil
புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: 11.84 செமீ பதிவு – இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளம்!
புதுச்சேரி: விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரியில் 11.84 செமீ மழை அளவு பதிவானது. மழை நின்றும் நகரின் முக்கியமான இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்தனர்.
புதுவையில் கடந்த 16-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. பகல் பொழுதில் மட்டும் 2.86 செமீ மழை பதிவானது. மதியத்துக்கு பின் மழை பெய்யவில்லை. ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரெங்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல நின்றது.
Click the link above to read the full article on the original website.