English
பாட்னா: ‘பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். மக்கள் பிஹாரில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்’ என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பிஹார் தேர்தலில் மகா கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகள், ஆர்ஜேடி குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும்.
பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். புதிய பிஹார் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்கள். கல்வி, நீர்ப்பாசனம், மருத்துவம், வேலைவாய்ப்புகள் மற்றும் உடனடி நடவடிக்கை பற்றிப் பேசுபவர்களே அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். பிஹார் மக்கள் மகா கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
Tamil
‘பிஹார் மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டனர்’ – தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
பாட்னா: ‘பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். மக்கள் பிஹாரில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்’ என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பிஹார் தேர்தலில் மகா கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகள், ஆர்ஜேடி குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். புதிய பிஹார் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்கள். கல்வி, நீர்ப்பாசனம், மருத்துவம், வேலைவாய்ப்புகள் மற்றும் உடனடி நடவடிக்கை பற்றிப் பேசுபவர்களே அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். பிஹார் மக்கள் மகா கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
Click the link above to read the full article on the original website.