பிஹாரில் 5 தொகுதிகளில் வென்றது ஓவைசி கட்சி: சீமாஞ்சல் பகுதியில் ஆர்ஜேடி வாஷ் அவுட்!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று கவனத்தை ஈர்த்துள்ளது. சீமாஞ்சல் பகுதியில் ஓர் இடத்தில் ஆர்ஜேடி கட்சி வெல்லாதது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பிஹாரில் இஸ்லாமிய வாக்குகள் உள்ள தொகுதிகளில் ஓவைசியின் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதன் காரணமாக 2020-ஆம் ஆண்டில் சீமாஞ்சல் பகுதியில் ஐந்து இடங்களை அக்கட்சி வென்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் 5 தொகுதிகளில் வென்று மீண்டும் கவனம் பெற்றுள்ளார் ஓவைசி. அராரியா, கதிஹார், கிஷன்கஞ்ச் மற்றும் பூர்னியா ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதியில் 24 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மாநிலத்தின் முஸ்லிம் மக்கள்தொகையில் பெரும் பகுதியும் இந்த மண்டலத்தில்தான் உள்ளன. எனவே, இந்த தேர்தலிலும் பிஹாரில் 25 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் ஓவைசி.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பலரது வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரின் கட்சி பிஹாரில் படுதோல்வி!

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்