மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அடுத்த மாதுளங்குப்பம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள ஏரி கலங்கல் பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் சிறிய அளவிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் மாதுளங்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, இருளர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பணிக்கு செல்வதற்கு ஏரிக்கரை மீது அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்திதான் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். ஆனால், ஏரியின் கலங்கல் பகுதியில் சாலை தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும்போது, குறிப்பிட்ட பகுதி சாலை நீரில் அடித்து செல்லப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.