பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஓர் இடத்தைக் கூட வெல்லவில்லை. தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) பிஹார் தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகித்த ஜன் சுராஜ், அதன் பின்னர் பூஜ்ஜிய நிலைக்கு சென்றுவிட்டது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு ஜேஎஸ்பி 234 வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மகா கூட்டணிக்கு புரட்சிகரமான மூன்றாவது மாற்று ஜன் சுராஜ்தான் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார் பிரசாந்த் கிஷோர்.
Click the link above to read the full article on the original website.