கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வருகிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கொடிசியா அரங்கில் கோவை மாநகர காவல் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Click the link above to read the full article on the original website.