சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணியாற்றும் 31,373 தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்த வகையில், 1,000 பேருக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை, குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்க 25 பேருக்கு மானியத்துடன் கடனுதவி, புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1,260 மாணவர்களுக்கு கல்வி, விடுதிஉள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடிக்கான உதவிகள், தாட்கோ நிறுவன சிறப்பு திட்டங்களின்கீழ், 1,000 பேருக்கு ரூ.35 லட்சம் உதவித் தொகை, பணியின்போது உயிரிழந்த 2 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார்.
Click the link above to read the full article on the original website.