புதுடெல்லி: தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு – காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது திடீரென வெடித்ததில் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
ஜம்மு – காஷ்மீரில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து புன்போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில் கடந்த அக்டோபர் மாத மத்தியில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் ஆதில் என்ற மருத்துவரை சிறப்பு விசாரணைக் குழுவினர் முதலில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டார்.
Click the link above to read the full article on the original website.