English
உடுமலை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை வேகமாக நிரம்பி வருகிறது. எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், பாலாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி. 1.9 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 51 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 250 கன அடி நீர், பிரதான கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.
Tamil
திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பாலாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
உடுமலை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை வேகமாக நிரம்பி வருகிறது. எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், பாலாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி. 1.9 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 51 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 250 கன அடி நீர், பிரதான கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.